கவிதையின் கையசைப்பு
கவிதையின் கையசைப்பு - எஸ். ராமகிருஷ்ணன்
கவிதை எப்போதும் வரலாற்றுடனும் வரலாற்று அனுபவங்களுடனும் தொடர்புகொண்டது என்கிறார் நோபல் பரிசு பெற்ற கவிஞர் செஸ்லாவ் மிலோஸ். சுழலும் மின்விசிறியின் இறக்கைகள் காற்றைத் துண்டிப்பது போன்றது தான் கவிதை எழுதுவதும் என்கிறார் செர்பியக் கவிஞர் மிலான் ஜோர்ட்ஜெவிக். இப்படி அறியப்படாத பிறமொழிக் கவிதைகளை நோக்கி நம் கவனத்தைத் திருப்புகிறது என்பதே இதன் தனிச்சிறப்பு. உலகக் கவிதைகள் பற்றிய இக்கட்டுரைகள் விகடன் தடம் இதழில் தொடராக வெளிவந்து தீவிர கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.