Skip to Content

எப்போ வருவாரோ?

எப்போ வருவாரோ? - ஆர்.கிருஷ்ணசாமி
‘குருஜி’ என்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் பரவசத்தோடு அழைக்கப்படுபவர் ஹரிதாஸ் கிரி சுவாமிகள். ஞானானந்த கிரி சுவாமிகளின் சீடரான இவர், தமிழகத்தில் _ குறிப்பாக சென்னையில் _ நாமசங்கீர்த்தனம் புத்துணர்ச்சியும் புது வேகமும் பெற முக்கியக் காரணமாக விளங்கியவர். இந்தியா முழுவதிலும், உலக அளவிலும் இவருக்கு பக்தர்கள் உண்டு. சென்னை நாரதகான சபா அரங்கில் ஒவ்வொரு மார்கழி மாதத்திலும் காலை வேளையில் ஹரிதாஸ் கிரி சுவாமிகள் நடத்திய நாமசங்கீர்த்தன வைபவத்துக்கு திருவிழா மாதிரியாக பக்தர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டது நினைவை விட்டு நீங்காத நாட்கள். கணீரென்ற வெண்கலக் குரலில் கீர்த்தனைகளை குருஜி பாட, மேடையில் அவருடன் அமர்ந்திருக்கும் சிஷ்ய கோடிகளும் சங்கீத வித்வான்களும் இணைந்து இசைக்க, அரங்கில் உட்கார்ந்திருப்பவர்கள் நெக்குருகிப்போன சிலிர்ப்பான நாட்கள் அவை. நூலாசிரியர் ஆர்.கிருஷ்ணசாமி, ஹரிதாஸ் கிரி சுவாமியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற பக்தர்களில் பிரதானமானவர். சுவாமிஜியின் ஆலோசனையின் படியே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தவர். 
₹ 90.00 ₹ 90.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days