எம்டன் செல்வரத்தினம்: சென்னையர் கதைகள்
| எம்டன் செல்வரத்தினம் : சென்னையர் கதைகள் கிழக்கு பதிப்பகம் 2017ம் ஆண்டு நடத்திய ‘சென்னை சிறுகதைப் போட்டி’யில் தேர்வு பெற்ற கதைகளின் தொகுப்பே இப்புத்தகம். எழுதுவார் எழுதினால் சலவைத்துணிக் கணக்கும் சிறுகதைதான். சிறுகதைகளை உயிர்த்திருக்கச் செய்யும் முயற்சியில் எடுத்து வைத்த சிறு சிறு செங்கற்களாகவே கிழக்கு பதிப்பகத்தில் சென்னைச் சிறுகதைப்போட்டிக்கு எழுதப்பட்ட எல்லாச் சிறுகதைகளையும் கருதுகிறேன். சென்னைக்குச் சிறுகதை இலக்கியப் புகழாரம் சூட்டப்படாத வசை கிழக்கு பதிப்பகத்தின் இந்தச் சென்னைத் தொகுப்பின் மூலம் சற்றே தீர்ந்தது.
|